Wednesday, May 27, 2009

பதிவர்களே..நண்பர்களே..உங்கள் உதவி தேவை !

இன்று காலையில் எனக்கு சகோதரி பூமாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

பார்வைப் புலனற்ற நமது சகோதர, சகோதரிகளுக்கு அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் பரீட்சை எழுதிக்கொடுக்க சேவை மனப்பான்மை கொண்ட அன்பான மனம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள். உதவ விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் இத் தொலைபேசி எண்ணை அணுகலாம்.

Disha Foundation - 9941014591 (இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அழைக்கவும் )

மாணவர் விபரங்களும், பரீட்சை விபரங்களும் கீழ்வருமாறு...

SCRIBE
REQURIEMENTS   May - June 2009

  • Student Name
Malarvizhi
Ramathilagam
Anbarasi
Pitchai
Selvaraj
Thamarai Selvi

  • 26 - Tuesday
English

  • 27 - Wednesday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 28 - Thursday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 29 - Friday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English
  • 30 - Saturday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
  • 1 - Monday
English
English
Tamil
Tamil
Tamil

  • 2 - Tuesday
English
English
Tamil
Tamil
Tamil
  • Time:
10 am to 1 pm

இத் தகவலைத் தெரிந்தவர்களிடத்தில் பரவச் செய்து விடுங்கள்.
உங்கள் பேருதவிகள் ஒருவர் வாழ்க்கைக்கு ஒளியேற்றட்டும்.
நன்றி நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

Monday, May 18, 2009

வலைப்பதிவராகி என்ன சாதித்தேன் ?

சில நாட்கள் ஓய்வுக்குப் பின் என் அன்பு உள்ளங்களான உங்களிடம் மீண்டு வந்துவிட்டேன். இன்று முதல் மீண்டும் வழமை போலவே உங்களிடையே கலந்துகொள்ள முயல்கிறேன். எனது உடல்நலக் குறைவின் நாட்களில் என்னிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரிக்கவென பல அன்பர்கள் முயன்றதாக நண்பர்கள் கூறினர். என்னால் உரையாட முடியாத நிலையிலிருந்தேன். மன்னியுங்கள்.

இணையம் வந்து பார்த்தபொழுதுதான் எத்தனை உள்ளங்கள் எனக்கென வேண்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. மிகுந்த மகிழ்வும், அதேவேளை உங்களையெல்லாம் கவலைக்குள் ஆழ்த்திவிட்டேனே என்ற வருத்தமும் ஒருசேர மிகைத்தது. வலைப்பதிவராகி என்ன சாதித்தேனென யாரேனும் என்னிடம் கேட்டால் சுட்டிக் காட்டக் கூடியளவு அற்புதமான நண்பர்களைப் பெற்றிருக்கிறேனென தைரியமாக உங்களைக் கை காட்டலாம் நான்.

இவ் வேளை எனது ஆரோக்கியத்துக்கான கூட்டுப் பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைக்கத் தம் வலைப்பதிவுகளிலும், குழுமங்களிலும் பதிவுகளிட்டிருந்த சகோதரி ஃபஹீமா ஜஹான்(பதிவு ஒன்று, பதிவு இரண்டு, பதிவு மூன்று), சகோதரி ஷைலஜா, சகோதரி தூயா, சகோதரி சாந்தி(தமிழமுதம்), சகோதரி ஆயிஷா மற்றும் நண்பர்கள் எம்.எம்.அப்துல்லாஹ், அபி அப்பா, ஆயில்யன், கண்ணபிரான் ரவிஷங்கர், தாயுமானவன் வெங்கட், குசும்பன், ஆசாத் ஜி, புகாரி ஐயா (அன்புடன்), சித்தன் ஐயா (யுகமாயினி), சக்தி சக்திதாசன் ஐயா அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

நலம் விசாரித்துத் தனி மின்னஞ்சல்கள் அனுப்பிக் காத்திருந்த மற்றும் எனது நலத்துக்கெனப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் ஷிப்லி அஹ்மத், என்.சுரேஷ், பிரேம்குமார், லக்கி சாஜஹான், தஞ்சை-மீரான், சாபு ஐயா, கார்த்திக், மீறான் அன்வர், சகோதரி சுவாதி, அஞ்சலி, வேணு ஐயா, பாஸ்கர், முகமூடி, துரை, ஃபோநிஒ சிவகுமார், சகோதரி பூங்குழலி, அஹ்மத் சுபைர், சகோதரி நட்சத்திரா, காமேஷ், மஞ்சூர் ராசா, சசி சுப்ரமணியன், சுதர்சன், வேந்தன் அரசு, ஷேன் வேல், சகோதரி வாணி, ராம் கோபால், பாலாஜி பாஸ்கரன், என்.சுரேஷ், அப்பனா, சிவா, சகோதரி உமா ஷக்தி, வினோத் குமார், மண்குதிரை, ஆல்பர்ட் பெர்ணாண்டோ, சகோதரி ராமலக்ஷ்மி, விசாலம் அம்மா, சகோதரி கீதா சாம்பசிவம், பொன்சந்தர், சகோதரி மீனா முத்து, சகோதரி ஜெயஸ்ரீ ஷங்கர், தேகி, சென்ஷி ஐயா, விக்னேஷ்வரன், கண்ணபிரான் ரவிஷங்கர், யோகன் -பாரிஸ், தேவ், சகோதரி சேதுக்கரசி,கந்தசாமி நாகராஜன், வெ.சுப்ரமணியன், விஜியின் சுதன், சகோதரி தேனுஷா, சக்திவேல் கதிர்வேல், திரு,திருமதி வரதராஜா, சரவணக்குமார் MSK, சகோதரி சித்ரா செல்லதுரை, பிகே சிவகுமார், சகோதரி மதுமிதா, ஸன்ஃபர், சகோதரி சக்தி ராசையா, இப்னு ஹம்துன், சகோதரி காந்தி ஜெகன்னாதன், சீனா ஐயா, செல்வன், சகோதரி அன்புடன் அருணா, கார்டின், ரசிகவ் ஞானியார், செந்தில்குமார், பழமைபேசி, கிரிஜாமணாளன் ஐயா, பிச்சுமணி, சகோதரி ஆயிஷா, ஹரன், தமிழ்ப்பறவை, ஆளவந்தான், ச்சின்னப்பையன், சகோதரி அமுதா, சகோதரி புதுகைத்தென்றல், வேத்தியன், டொக்டர்.எம்.கே.முருகானந்தன், T.V.ராதாகிருஷ்ணன், நரேஷ்குமார், சகோதரி சந்தனமுல்லை, குப்பன் யாஹூ, அமிர்தவர்ஷினி அம்மா, அமல், முரளிகண்ணன், ராஜ நடராஜன், ஜெயக்குமார், சகோதரி திவ்யப்ரியா,S.A. நவாஸுத்தீன், சகோதரி புகலினி, கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், இயற்கை, சுரேஷ், நசரேயன், டொன் லீ, ஆகாயநதி, திகழ்மிளிர், தமிழன்-கறுப்பி, இராகவன் நைஜீரியா, இளா, தேவன்மாயம், அ.மு.செய்யது, சகோதரி துளசி கோபால், கானாபிரபா, ஜோதிபாரதி, முரளிகண்ணன், சீமாச்சு, ஜோ, மதுவதனன் மௌ,சகோதரி வல்லி சிம்ஹன், வேந்தன், தீப்பெட்டி, சகோதரி சின்ன அம்மிணி, விஷ்ணு, லோகு, அம்பி, சகோதரி வித்யா, சகோதரி முத்துலெட்சுமி, நான் ஆதவன், மோனிபுவன் அம்மா, கும்க்கி, delphine, சகோதரி ரம்யா, சந்தோஷ், ச.முத்துவேல், தேவஅபிரா, தமிழ்நெஞ்சம், சகோதரி தமிழ்நதி, ஜீவன், மஹேஷ், கேபிள் ஷங்கர், மாசற்ற கொடி, கிரி, லக்கிலுக், டோண்டு ராகவன், வாஞ்ஜூர், வடகரை வேலன், வால்பையன், அனுஜன்யா, குடந்தை.அன்புமணி, வெயிலான், சகோதரி ஜோதி, சகோதரி மாதேவி, டக்ளஸ், கார்த்திகைப் பாண்டியன், சதீசு குமார், ராஜ நடராஜன், பிரேம்ஜி, மாதவராஜ், துரியோதனன்,கடையம் ஆனந்த், சஞ்சய் காந்தி, ஊர்சுத்தி சாதிக், தஞ்சாவூரான், தங்கராசா ஜீவராஜ், பட்டாம்பூச்சி, DJ, அறிவே தெய்வம், நெல்லை காந்த், பெயரிலி, சகோதரி தாரணி பிரியா, கீழை ராசா, நசரேயன், சதானந்தன், சர்வேசன், மதிபாலா, சுரேகா, ராகவ், மதுரையம்பதி, சகோதரி சிந்தாமணி, கார்த்திகேயன் G, Dr.M.சிவஷங்கர், குமார்(சிங்கை), தமிழ்த்தேனீ ஐயா, சிறீதரன், ஏ.சுகுமாரன், நா.கண்ணன் ஐயா, அசரீரி, பர்ஸான்,
சித்தாந்தன், அம்பலம்-பிரபா, சா.கி.நடராஜன், வடிவேலன் ஆர் இன்னும் தொலைபேசி மூலம் அணுகியும் என்னுடன் பேச முடியாமல் போன அன்பு உள்ளங்கள், பெயர் குறிப்பிடாமலே எனக்காகப் பிரார்த்தித்தவர்கள்.. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பலர் தனி மின்னஞ்சல்களில் உடல் நலத்துக்கு என்ன ஆனதெனவும், மருத்துவமனை அனுபவங்களையும் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது பற்றி விரிவாக அடுத்த பதிவில் தருகிறேன்.

மீண்டும் நன்றிகள் இனிய நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.